தேசியம்
செய்திகள்

Newfoundland கடற்கரையில் தமிழ் அகதிகள் வருகையின் 35வது ஆண்டு நிறைவு!

கனடாவின் Newfoundland மாகாண கடற்கரையில் தமிழ் அகதிகள் வருகையின் 35 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

கனேடிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் மெய்நிகர் நிகழ்வாக இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கனடாவின் குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Marco Mendicino, நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, கப்பலில் வருகை தந்த தமிழர்களை கடலில் இருந்து காப்பாற்றிய Gus Daltonனின் குடும்பத்தினர் உட்பட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

146 ஆண்கள், 4 பெண்கள், 5 குழந்தைகள் என மொத்தம் 155 தமிழர்கள் Newfoundland கரையில் காப்பாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கனடா அமெரிக்க எல்லை கட்டுப்பாடுகள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு!

Gaya Raja

மற்றொரு முன்னாள் வதிவிடப் பாடசாலைக்கு அருகில் கல்லறைகள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

375க்கு மேற்பட்ட கனடியர்கள் சூடானில் இருந்து வெளியேறினர்

Leave a Comment

error: Alert: Content is protected !!