தேசியம்
செய்திகள்

முதற்குடியினரின் வதிவிடப் பாடசாலைகளுக்கு கத்தோலிக்க திருச்சபை பொறுப்பேற்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்

முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலைகளுக்கு பொறுப்பேற்குமாறு கத்தோலிக்க திருச்சபையை  கனடிய பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

கனடாவின் வதிவிடப் பாடசாலைகளின் அமைப்பில் அதன் பங்கிற்கு கத்தோலிக்க திருச்சபையை பொறுப்பேற்குமாறு பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்துள்ளார். கடந்த ஆண்டுகளில் வதிவிடப் பாடசாலைகளின் விடயத்தில் தேவாலயம் எடுத்துள்ள நிலைப்பாட்டால் கத்தோலிக்கராக மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும்  Trudeau தெரிவித்தார்.

120 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் வதிவிடப் பாடசாலைகளுக்கு தேவாலயத்தின் பங்கிற்கு மன்னிப்பு கேட்குமாறு 2017ஆம் ஆண்டில் தனிப்பட்ட முறையில் போப்பாண்டவரிடம் கேட்டுக் கொண்டதாகவும் பிரதமர்  குறிப்பிட்டார்.

Related posts

கத்திக் குத்துச் சம்பவத்தில் மரணமடைந்த தமிழர் அடையாளம் காணப்பட்டார்

Lankathas Pathmanathan

தென் கொரியாவுக்கு முதலாவது உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட பிரதமர்

Lankathas Pathmanathan

Albertaவை தாக்கிய மிகப்பெரிய நில நடுக்கம்!

Lankathas Pathmanathan

Leave a Comment