தேசியம்
செய்திகள்

முதற்குடியினரின் வதிவிடப் பாடசாலைகளுக்கு கத்தோலிக்க திருச்சபை பொறுப்பேற்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்

முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலைகளுக்கு பொறுப்பேற்குமாறு கத்தோலிக்க திருச்சபையை  கனடிய பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

கனடாவின் வதிவிடப் பாடசாலைகளின் அமைப்பில் அதன் பங்கிற்கு கத்தோலிக்க திருச்சபையை பொறுப்பேற்குமாறு பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்துள்ளார். கடந்த ஆண்டுகளில் வதிவிடப் பாடசாலைகளின் விடயத்தில் தேவாலயம் எடுத்துள்ள நிலைப்பாட்டால் கத்தோலிக்கராக மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும்  Trudeau தெரிவித்தார்.

120 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் வதிவிடப் பாடசாலைகளுக்கு தேவாலயத்தின் பங்கிற்கு மன்னிப்பு கேட்குமாறு 2017ஆம் ஆண்டில் தனிப்பட்ட முறையில் போப்பாண்டவரிடம் கேட்டுக் கொண்டதாகவும் பிரதமர்  குறிப்பிட்டார்.

Related posts

உள்ளக விவகாரங்களில் கனடா தொடர்ச்சியாக தலையிடுகிறது: இந்தியா குற்றச்சாட்டு

Lankathas Pathmanathan

பசுமைக் கட்சியிலிருந்து விலகி Liberal கட்சியில் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்!

Gaya Raja

உக்ரைனுக்கு கவச வாகனங்களை வழங்குவதில் கனடா முன்னணியில் இருக்க முடியும்: பாதுகாப்பு அமைச்சர்

Lankathas Pathmanathan

Leave a Comment