தேசியம்
செய்திகள்

முதற்குடியினரின் வதிவிடப் பாடசாலைகளுக்கு கத்தோலிக்க திருச்சபை பொறுப்பேற்க வேண்டும்: பிரதமர் வலியுறுத்தல்

முதற்குடியினரின் முன்னாள் வதிவிடப் பாடசாலைகளுக்கு பொறுப்பேற்குமாறு கத்தோலிக்க திருச்சபையை  கனடிய பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

கனடாவின் வதிவிடப் பாடசாலைகளின் அமைப்பில் அதன் பங்கிற்கு கத்தோலிக்க திருச்சபையை பொறுப்பேற்குமாறு பிரதமர் Justin Trudeau அழைப்பு விடுத்துள்ளார். கடந்த ஆண்டுகளில் வதிவிடப் பாடசாலைகளின் விடயத்தில் தேவாலயம் எடுத்துள்ள நிலைப்பாட்டால் கத்தோலிக்கராக மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும்  Trudeau தெரிவித்தார்.

120 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் வதிவிடப் பாடசாலைகளுக்கு தேவாலயத்தின் பங்கிற்கு மன்னிப்பு கேட்குமாறு 2017ஆம் ஆண்டில் தனிப்பட்ட முறையில் போப்பாண்டவரிடம் கேட்டுக் கொண்டதாகவும் பிரதமர்  குறிப்பிட்டார்.

Related posts

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கனடாவின் இஸ்லாமிய எதிர்ப்பு பிரதிநிதியின் பதவி முற்றாக அகற்றப்பட வேண்டும்

Lankathas Pathmanathan

அதிகரித்தது வேலையற்றோர் விகிதம்!

Lankathas Pathmanathan

பாவனைக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு தடுப்பூசியும் பாதுகாப்பானது: பிரதமர்

Gaya Raja

Leave a Comment