தேசியம்
செய்திகள்

தடுப்பூசிகளின் கட்டுப்பாடுகள் குறித்து கனடிய பிரதமர் கவலை

COVID தடுப்பூசிகளின்  கட்டுப்பாடுகள் குறித்து கனடிய பிரதமர் கவலை தெரிவித்துள்ளார். ஆனாலும் இதனால்  கனடா பாதிக்கப்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என பிரதமர் Justin Trudeau நாடாளுமன்றத்தில் கூறினார்.

புதன்கிழமை நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார விமர்சகருமான Michelle Rempel Garner முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

உள்நாட்டு நோய்த் தடுப்பு பிரச்சாரங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்காக இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து கனடாவுக்கான தடுப்பூசி விநியோகம் தடுத்து நிறுத்தப்படும் என பிரதமர் தனது பதிலில் கவலை தெரிவித்தார். ஆனாலும் இதனால் கனடாவின் தடுப்பூசி விநியோகம் பாதிக்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை என பிரதமர் Trudeau கூறினார்.

இந்த விடயத்தில் ஐரோப்பிய ஆணையத்தின் உயர்ந்த மட்டங்களுக்கு தான் நேரடி தொடர்புகளை பேணி கனடாவுக்கான தடுப்பூசி விநியோகத்தை  உறுதி செய்யவு ள்ளதாகவும் பிரதமர் Trudeau தெரிவித்தார். 

Related posts

சீனாவுடனான உறவுகள் தொடர்பாக வேட்பாளர் ஒருவரை தவிர்க்குமாறு Liberal கட்சியை CSIS எச்சரித்தது?

Lankathas Pathmanathan

Quebec சட்டமன்றத்திற்கு எதிரான வன்முறை குறித்த எச்சரிக்கை

Lankathas Pathmanathan

B.C. விமான விபத்தில் இருவர் பலி

Lankathas Pathmanathan

Leave a Comment