தேசியம்
செய்திகள்

Ontarioவில் சர்வதேச பயணிகளுக்கான கட்டாய பரிசோதனை ஆரம்பம்

விமானம் மூலம் Ontario மாகாணத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கான கட்டாய COVID சோதனை இன்று (திங்கள்) முதல் ஆரம்பமாகியது.

தொற்றின் பரவலைத் தடுக்கும் முயற்சியாக இந்தக் கட்டாய சோதனையை அமல்படுத்த Doug Ford அரசாங்கம் முடிவுசெய்தது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த அறிவித்தலை மாகாண முதல்வர் Ford வெளியிட்டிருந்தார். இன்று Peason சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கனடா வரும் பயணிகள் இந்தக் கட்டாய சோதனையை எதிர்கொண்டனர்.

இந்த நடைமுறை விரைவில் அமெரிக்காவிற்கும் Ontario மாகாணத்திற்கும் இடையிலான நில எல்லைக் கடப்புகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.

Related posts

1,600 கனடியர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறினர்!

Lankathas Pathmanathan

Ontario மாகாணத்தில் ஒரு நாள் அனைத்து பொதுப் பாடசாலைகளும் மூடப்படவுள்ளன!

thesiyam

பாவனைக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு தடுப்பூசியும் பாதுகாப்பானது: பிரதமர்

Gaya Raja

Leave a Comment