September 19, 2024
தேசியம்
செய்திகள்

கனடாவின் முன்னாள் ஐ.நா. அதிகாரி சீனா சார்பில் உளவு பார்த்தார்?

கனடாவின் முன்னாள் ஐ.நா அதிகாரி சுவிட்சர்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது வட கொரியாவுக்காக பணிபுரியும் கனடிய முன்னாள் ஐ.நா அதிகாரி ஒருவர் உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் சுவிட்சர்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

ஐம்பது வயது மதிக்கத்தக்க கனடியர், சுற்றுச்சூழல் ஆலோசகராக தனது பணிக்காக சீனாவுக்கு பயணம் செய்து வந்தது தெரியவருகிறது.

2021 முதல் ஆரம்பமான விசாரணைகளை தொடர்ந்து, உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் சுவிஸ் அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

சுவிஸ் அதிகாரிகள் விசாரணையில், அவர் சீனாவின் சார்பாக பணியாற்றுவது கண்டறியப்பட்டது.

இவர் மீது இதுவரை குற்றச் சாட்டுகள் எதுவும் பதிவாகவில்லை.

Related posts

தமிழ் நடை பயணக் குழுவினரை அடுத்த வாரம் சந்திக்கவுள்ள Ontario முதல்வர்

Gaya Raja

Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த விபரம்

Lankathas Pathmanathan

கனேடிய அமெரிக்க எல்லை தொடர்ந்தும் மூடப்பட்டிருக்கும்

Gaya Raja

Leave a Comment