தேசியம்
செய்திகள்

இத்தாலி பயணமாகும் கனடிய பிரதமர்

G7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் Justin Trudeau புதன்கிழமை (12) இத்தாலி பயணமாகிறார்.

உலகளாவிய ரீதியில் இரண்டு புவிசார் அரசியல் மோதல்கள் நிகழும் நிலையில் இம்முறை G7 தலைவர்கள் உச்சி மாநாடு நடைபெறுகிறது.

இந்த மூன்று நாள் உச்சி மாநாடு வியாழக்கிழமை (13) ஆரம்பமாகிறது.

G7 தலைவர்கள் மாநாட்டில் உலகின் ஏழு பணக்கார ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் பல்வேறு விடயங்களை விவாதிக்கின்றனர்.

கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான் ஆகிய G7 நாடுகளின் தலைவர்கள் ஆண்டு தோறும் சந்திக்கின்றனர்.

இம்முறை ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-ஹமாஸ் போர்கள், செயற்கை நுண்ணறிவு, இடம்பெயர்வு, ஆப்பிரிக்காவுடன் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Justin Trudeau உலக நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு G7 உச்சி மாநாட்டை கனடா நடத்த உள்ளது.

சனி (15), ஞாயிற்றுக்கிழமைகளில் (16) சுவிட்சர்லாந்தில் நடைபெறும் உக்ரைன் அமைதி உச்சி மாநாட்டிலும் Justin Trudeau கலந்து கொள்கிறார்.

Related posts

98 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கும் கனடா

Scarborough மதுபான விடுதி துப்பாக்கி சூட்டில் மூன்று தமிழர்கள் காயம்

Lankathas Pathmanathan

கனடா-அமெரிக்கா எல்லையில் நிகழ்ந்த மூன்று வெவ்வேறு சம்பவங்களில் ஒருவர் பலி-15 பேர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment