September 7, 2026
தேசியம்
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 500,000 குழந்தைகள் மருந்து

வெளிநாட்டு இறக்குமதிகள் மூலம் அடுத்த மூன்று வாரங்களில் 500 ஆயிரம் குழந்தைகள் மருந்து கனடாவை வந்தடையவுள்ளது.

அதிகரித்து வரும் காய்ச்சல், சுவாச ஒத்திசைவு தொற்றுகளுக்கு மத்தியில் வெள்ளிக்கிழமை (25) இந்த அறிவித்தலை மத்திய அரசாங்கம் வெளியிட்டது.

ஏற்கனவே வெளிநாட்டு இறக்குமதி மூலம் இந்த வாரம் ஒரு மில்லியன் குழந்தைகளுக்கான மருந்துகள் கனடாவை வந்தடைந்துள்ளன.

November மாதம் இதுவரை உள்நாட்டில் சுமார் 1.1 மில்லியன் குழந்தைகளுக்கான மருந்துகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உள்நாட்டில் கடந்த சில வாரங்களாக உற்பத்தி இருமடங்காக அதிகரித்துள்ளது என அமைச்சர் Duclos கூறினார்.

Related posts

குறைந்தது வேலையற்றோர் விகிதம்!

Lankathas Pathmanathan

COVID நோய்த் தொற்றின் நீண்ட கால அறிகுறிகளை எதிர்கொள்ளும் 3.5 மில்லியன் கனடியர்கள்

Lankathas Pathmanathan

ஆறாவது வட்டி விகிதக் குறைப்பை இந்த வாரம் அறிவிக்கும் மத்திய வங்கி?

Lankathas Pathmanathan

Leave a Comment