தேசியம்
செய்திகள்

McGill பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கண்ணீர் புகை குண்டு வீசி கலைப்பு

McGill பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறையினர் கலைத்தனர்.

James நிர்வாகக் கட்டிடத்தில் தங்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் போராட்டக்காரர்கள்  ஒரு தடுப்பை ஏற்படுத்த ஆரம்பித்த நிலையில் Montreal காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இனப்படுகொலையாளர்களுடன் McGill உறவுகளை துண்டிக்க வேண்டும் என பாலஸ்தீனிய மனித உரிமைகளுக்கான ஒற்றுமை அமைப்பு கோரி போராட்டத்தை முன்னெடுத்தது.

இந்த போராட்டத்தை கலைக்கும் முயற்சியில் காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இந்த நிலையில் இனப்படுகொலைக்கு எதிரான கொள்கைக்கான மாணவர் நிலைப்பாட்டை வெளிப்படுத்தக்கூடிய அனைத்து வழிமுறைகளையும் பல்கலைக்கழகம் ஒடுக்கியுள்ளது என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

Related posts

அமைச்சரவை சந்திப்பில் கலந்துகொண்ட பிரதமருக்கு எதிரான போராட்டங்கள்

Lankathas Pathmanathan

Toronto அலுவலக துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கி தாரியும் பலி

Lankathas Pathmanathan

வெள்ளப் பேரழிவை எதிர்கொள்ளும் பாகிஸ்தானுக்கு கனடா 5 மில்லியன் டொலர் நிதியுதவி

Lankathas Pathmanathan

Leave a Comment