தேசியம்
செய்திகள்

Quebec மாகாணத்தில் மின்சாரத்தை இழந்த 100,000 வாடிக்கையாளர்கள்

Quebec மாகாணத்தில் தொடரும் கடும் பனி காரணமாக 100,000க்கும் அதிகமானோர் மின்சாரம் இல்லாத நிலை தொடர்கிறது.

Mauricie, Quebec City பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி நிலவரப்படி 110,000 Hydro-Québec வாடிக்கையாளர்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளனர்.

பலத்த பனிப்பொழிவு காரணமாக மரக்கிளைகள் முறிவதாகவும், அவை மின்கம்பிகளை தாக்குவதாகவும் Hydro-Québec பேச்சாளர் தெரிவித்தார்.

100 க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முடிந்தவரை விரைவாக மின்சாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மாகாணம் முழுவதும் பல பகுதிகளில் பனிப்பொழிவு எச்சரிக்கை தொடர்ந்து அமுலில் உள்ளது.

Related posts

சீனாவில் 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்ற கனேடியர் !

Gaya Raja

Greenbelt ஊழலில் Ontario அரசாங்கத்தின் பங்கை விசாரிக்கும் RCMP

Lankathas Pathmanathan

42 பேர் கைது – 173 துப்பாக்கிகள் பறிமுதல் – 442 குற்றச்சாட்டுகள் பதிவு

Leave a Comment