தேசியம்
செய்திகள்

தொற்றின் இரண்டாம் ஆண்டில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரிப்பு

COVID தொற்றின் இரண்டாம் ஆண்டில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

தொற்றின் இரண்டாம் ஆண்டில், COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 0 முதல் 4 வயதுடைய குழந்தைகளிடையே 600 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

கனடிய சுகாதார தகவல் நிறுவனத்தின் புதிய தரவுகளின்படி இந்தத் தகவல் வெளியானது

2020-2021 ஆம் ஆண்டில், தொற்றின் காரணமாக இந்த வயதெல்லையில் 325 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனாலும் 2021-2022 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 2,315ஆக அதிகரித்தது.

இந்த வயதினரின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு COVID ஆறாவது காரணி என வியாழக்கிழமை (23) வெளியிடப்பட்ட தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

Related posts

Hantavirus பரவல் ஆபத்து கனடாவில் குறைவு: தலைமை பொது சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan

2024 Paris Olympics: Hammer throw போட்டியில் கனடா முதல் முறையாக வென்றது தங்கம்

Lankathas Pathmanathan

D-Day நிகழ்வில் பங்கேற்ற France பயணமாகும் பிரதமர்

Lankathas Pathmanathan

Leave a Comment