February 12, 2025
தேசியம்
செய்திகள்

தொற்றின் இரண்டாம் ஆண்டில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அதிகரிப்பு

COVID தொற்றின் இரண்டாம் ஆண்டில் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

தொற்றின் இரண்டாம் ஆண்டில், COVID காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 0 முதல் 4 வயதுடைய குழந்தைகளிடையே 600 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

கனடிய சுகாதார தகவல் நிறுவனத்தின் புதிய தரவுகளின்படி இந்தத் தகவல் வெளியானது

2020-2021 ஆம் ஆண்டில், தொற்றின் காரணமாக இந்த வயதெல்லையில் 325 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனாலும் 2021-2022 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 2,315ஆக அதிகரித்தது.

இந்த வயதினரின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கு COVID ஆறாவது காரணி என வியாழக்கிழமை (23) வெளியிடப்பட்ட தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

Related posts

கனடியர்களுக்கு விரைவில் பயணக் கட்டுப்பாடு: பிரதமர் Trudeau எச்சரிக்கை

Lankathas Pathmanathan

அமெரிக்க-கனடா எல்லையில் நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு

Lankathas Pathmanathan

விமான நிலையங்களின் கால தாமதங்களை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை: மத்திய அமைச்சர்கள் உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment