தேசியம்
செய்திகள்

Londonனில் வெறுப்புணர்வை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வமத நடை பவனி

வெறுப்புணர்வை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வமத நடை பவனி வெள்ளிக்கிழமை மாலை London Ontarioவில் நடைபெற்றது.

ஒரு முஸ்லிம் குடும்பத்தில் நான்கு உறுப்பினர்கள் இழப்புக்கு சமூகம் தொடர்ந்து இரங்கல் தெரிவிக்கும் வகையில் இந்த நடை பவனி நடைபெற்றது. முஸ்லிம் குடும்பத்தினர் மீது வாகன சாரதி ஒருவர் வேண்டுமென்றே மோதியதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நால்வர் கொல்லப்பட்டனர்.

இந்தச் சம்பவத்தில் Londonனை சேர்ந்த 20 வயதான இளைஞர் மீது நான்கு முதல் நிலை கொலை குற்றச்சாட்டுக்களும் ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Related posts

அவசரகாலச் சட்டத்தை மாற்றும் New Brunswick

Lankathas Pathmanathan

மீண்டும் 2,500க்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja

York பல்கலைக்கழக பாலஸ்தீன ஆதரவு போராட்டம் கலைப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment