தேசியம்
செய்திகள்

விடுமுறை நாட்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கனடியர்கள் பயணித்துள்ளனர்

COVID பரவலின் மத்தியில் பயணங்களுக்கான திட்டங்களை இரத்து செய்யுமாறு கனடியர்களை பிரதமர் மீண்டும் கோரியுள்ளார்.

கடந்த நத்தார், புதுவருட விடுமுறை நாட்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான கனடியர்கள் பயணித்ததாக தரவுகள் வெளியான நிலையில் இந்தக் கோரிக்கையை பிரதமர் Justin Trudeau விடுத்துள்ளார். Cell Phone தரவைப் பகுப்பாய்வு செய்த பின்னர், விடுமுறை நாட்களில் 1.2 மில்லியன கனடியர்கள் பயணம் செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கனடாவுக்கு வெளியே அத்தியாவசியமற்ற பயணம் தொடர்பாக மத்திய பொது சுகாதார வழிகாட்டுதல் மாறவில்லை என்பதையும் பிரதமர் Trudeau மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளார். உள்ளூர், மாகாண, மத்திய மட்டத்திலான சுகாதார அதிகாரிகள், இந்த நேரத்தில் விடுமுறை பயணத்துக்கு எதிராக பலமுறை கடுமையான எச்சரிக்கைகளை விடுத்துள்ளனர்.

Related posts

கனடாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட தமிழர் மரணம்

Lankathas Pathmanathan

Ajax தமிழர் மரணத்தில் இரண்டாம் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு

Lankathas Pathmanathan

ஐ.நா. உலக உணவுத் திட்டத்துக்கு 250 மில்லியன் டொலர்களை வழங்கும் கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment