தேசியம்
செய்திகள்

AstraZeneca தடுப்பூசியுடன் தொடர்புடைய மேலும் இரண்டு மரணங்கள்!

AstraZeneca தடுப்பூசியுடன் தொடர்புடைய இரண்டு மரணங்கள் கனடாவின் இரண்டு மாகாணங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Albertaவிலும் New Brunswickகிலும் இந்த மரணங்கள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டன.AstraZeneca தடுப்பூசியை பெற்ற பின்னர் ஏற்பட்ட இரத்த உறைவு காரணமாக இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Albertaவில் மரணமடைந்தவர் 50 வயது மதிக்கத்தக்க பெண் என சுகாதார அதிகாரிகள் அறிவித்தனர். New Brunswickகில் மரணமடைந்தவர் பெண் என்ற தகவல் மாத்திரம் சுகாதார அதிகாரிகளால் வெளியிடப்பட்டது.

ஆனாலும் COVID தொற்று அபாயம் AstraZeneca தடுப்பூசியினால் ஏற்படும் ஆபத்தை விட அதிகமானது என இரண்டு மாகாணங்களின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில்   இந்த இரண்டு மாகாணங்களிலும் தொடர்ந்தும் AstraZeneca தடுப்பூசிகள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 2ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

COVID வைரஸ் எதிர்ப்பு மருந்து மதிப்பாய்வின் இறுதிக் கட்டத்தில் உள்ளது: Health கனடா

Lankathas Pathmanathan

தடுப்பூசி கடவுச்சீட்டை Quebec நடைமுறைபடுத்துகிறது !

Gaya Raja

Leave a Comment